கோவில்பட்டி 5 வயது சிறுவன் 75 மணி நேர ஸ்கேட்டிங் சாதனை
உலகின் மிக நீண்ட நேர ஸ்கேட்டிங் விளையாட்டிற்கான சாதனை ஓட்டம் தூத்துக்குடி சக்தி விநாயகா இந்து வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 34 ஸ்கேட்டிங் வீரர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 5 வயது கவிஷ் என்ற சிறுவன் சரவணா ஆர்ட்ஸ் ப்யூசன் மற்றும் ஸ்கேட்டிங் சென்டர் சார்பாக பங்கேற்று சாதனை படைத்தார் , அவரு க்கு யுனிக்கோ உலக சாதனை விருது, மற்றும் நோபல் உலக சாதனை விருது வழங்கப்பட்டது,
சிறுவனின் சாதனை ஓட்டத்தை அறிந்த கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் மாணவனை காவல் துணை கண்கானிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டி சால்வை அணிவித்து பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் நிகழ்ச்சியில் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் கண்ணன் உட்பட சிறுவனின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Tags :