விவசாயிகளுக்கு புதிய திட்டம்: தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் வேளாண்மை இணை இயக்குநர்கள் கிராம அளவில் பயிர் சாகுபடிக்கான புதிய திட்டம் தயாரித்து அதற்குத் தேவைப்படும் இடுபொருட்களை விவசாயிகளுக்கு வழங்கிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும் என்று அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில், பசுந்தாளுர விதைகளை உரிய காலத்தில் விநியோகித்து விதைப்பு செய்வதை கண்காணித்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :