விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்
கடந்த நவம்பர் 18ஆம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார். விஜயகாந்துக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தானாக சுவாசிப்பதில் சிரமம் இருந்து வந்தது. தொடர்ந்து, கடந்த வாரம் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து, உரிய சிகிச்சைகளை அளித்தனர். இந்த நிலையில், அவரது உடல்நிலை தற்போது சீரடைந்து இன்று வீடு திரும்பியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags :