ஆக்கிரமிப்பு அகற்றம் - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

by Staff / 21-08-2024 01:05:36pm
ஆக்கிரமிப்பு அகற்றம் - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகள், அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தலைமைச் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்காணிக்க எத்தனை குழுக்கள் உள்ளன? அவை முறையாக கண்காணிக்கிறதா? எனவும் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

 

Tags :

Share via