மீட்பு பணிக்கு உதவியதற்காக நன்ற தெரிவித்துக்கொள்கிறோம்

by Admin / 12-12-2021 12:05:38am
 மீட்பு பணிக்கு உதவியதற்காக நன்ற தெரிவித்துக்கொள்கிறோம்

 

குன்னூரில் ,ராணுவ தலைமை தளபதிபிபின் ராவத் உள்பட14 பேர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளாகியதில் 13 பேர் உடல் கருகி இறந்தனர். விமானி எழுபது விழுக்காடு தீக்காயங்களோடு உயிர் பிழைத்தார்.இவ்விபத்து நடந்தது அறிந்ததும் தமிழக அரசு விரைந்து பல்வேறு உதவிகளை செய்தது. இவ்விபத்து மீட்புக்கு உதவி செய்த  தமிழக முதல்வர் உள்ளிட்டோருக்கு இந்திய  விமானப்படை தம் ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டிருக்கிறது. அதில்,"ஹெலிகாப்டர் விபத்தில் மீடபு பணிகளுக்கு தமிழக முதல்வர் -பணியாளர்கள் வழங்கிய உடனடி ஒத்துழைப்புக்கு  -உதவிக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துக்கொள்கிறது.நீலகிரி மாவட்ட கலெக்டர்,காவல் துறை, காட்டேரி கிராம மக்களுக்கும் மீட்பு பணிக்கு உதவியதற்காக நன்ற தெரிவித்துக்கொள்கிறோம்"

 மீட்பு பணிக்கு உதவியதற்காக நன்ற தெரிவித்துக்கொள்கிறோம்
 

Tags :

Share via