ரவுடி பேபி சூர்யா மீது இந்து மக்கள் கட்சி புகார்

by Editor / 22-10-2021 07:41:14pm
ரவுடி பேபி சூர்யா மீது இந்து மக்கள் கட்சி புகார்

மதுரை: ரவுடி பேபி சூர்யா, சிக்கா சிக்கந்தர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.அதில்,இணையதளம் மூலமாக மாணவ  மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தி வருகின்ற வேலையில் அதனை கெடுக்கின்ற வகையிலும்,பெண்களை முக சுழிக்க வைக்கும் வகையிலும்,ஆபாசமாக தமிழ் சமுதாய நாகரீகத்தை சீரழிக்கும் வகையில் யூடியூப் மற்றும் இணையதளத்தில் ஆபாச காணொலி வெளியிடுகின்றார்கள். எனவே, ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா (எ) சிக்கந்தர் ஆகியோர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைத்தள ங்களில் ரவுடிபேபி சிக்கா பேசிய அறுவருக்கதக்க வீடியோக்களை தடை செய்யவும், ரவுடிபேபி சிக்கா இணையதளங்களை முடக்கவும் இந்து மக்கள் கட்சி தனது மனுவில் கோரியுள்ளது.


தமிழக கலாசாரம் பண்பாட்டை சீரழிக்கும் வகையில், வியாபார நோக்கத்தோடு வேண்டுமென்று திட்டமிட்டு சமுதாய சீர்க்கேட்டை உண்டாக்கும் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா என்ற சிக்கந்தர் மீது நடவடிக்கை இல்லை எனில் மதுரை உள்பட தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டம் விரைவில் வலுபெறும் என்று இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via