தலைவர் பதவிக்கு யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி – கேஎஸ் அழகிரி
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல்காந்தி, வேணுகோபால் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, தமிழக அரசியல் சூழல் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொள்வதற்கு டெல்லி வந்துள்ளேன். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நீடித்தாலும் மகிழ்ச்சி, வேறு ஒருவரை நியமித்தாலும் மகிழ்ச்சி தான்'' என்று தெரிவித்தார்.Tags :