சாலை விபத்து - 4 பேர் பலி

by Staff / 08-07-2023 12:11:16pm
 சாலை விபத்து - 4 பேர் பலி தெலுங்கானாவில் உள்ள அதிலாபாத் மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து ஒன்று நடைபெற்றது. குடிஹத்னூர் மண்டலம் மேகலமண்டி என்ற இடத்தில் இன்று அதிகாலை ஆட்டோ மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் பலத்த காயம் அடைந்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அடிலாபாத் ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  
 

Tags :

Share via