பந்தேல்கண்ட் விரைவு நெடுஞ்சாலை பிரதமர் மோடி வருகிற 12ந் தேதி திறந்து வைக்கிறார்..

by Editor / 10-07-2022 09:18:01am
 பந்தேல்கண்ட் விரைவு நெடுஞ்சாலை பிரதமர் மோடி வருகிற 12ந் தேதி திறந்து வைக்கிறார்..

உத்தரப்பிரதேசத்தில் 296 கி.மீ. தொலைவுக்கு அமைத்த விரைவுச்சாலை - பிரதமர் மோடி வருகிற 12ந் தேதி திறந்து வைக்கிறார்.

 கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் 15ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பந்தேல்கண்ட் விரைவு நெடுஞ்சாலையைப் பிரதமர் மோடி வருகிற 12ந்தேதி திறந்து வைக்கிறார்.சித்ரகூட் முதல் இடாவா வரையுள்ள 7 மாவட்டங்களை இணைக்கும் வகையில் 296 கிலோமீட்டர் தொலைவுக்கு நால்வழி விரைவுச் சாலையை மாநில அரசு அமைத்துள்ளது. கொரோனா சூழலில் கடும் சவால்களுக்கிடையில் குறித்த காலத்துக்கு எட்டு மாதத்துக்கு முன்பாகவே பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.பந்தேல்கண்ட் மண்டலத்தின் வேளாண்மை, தொழில், வணிகம், சுற்றுலாத் துறைகளின் வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டுக்கும் இது ஊக்கமளிக்கும்.

 பந்தேல்கண்ட் விரைவு நெடுஞ்சாலை பிரதமர் மோடி வருகிற 12ந் தேதி திறந்து வைக்கிறார்..
 

Tags : Prime Minister Modi will inaugurate Bandelkhand Expressway on 12th.

Share via