வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள்

by Staff / 08-07-2023 05:08:28pm
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள் ஸ்பெயினின் சராகோசா மாகாணத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ள பாதிப்பு காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வெள்ளத்திற்கு பயந்து சிலர் காரின் கூரையில் ஏறி அமர்ந்திருந்தனர். ஆனால் அவர்கள் காருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க போலீசார் மீட்புப் குழுவினரை அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

Tags :

Share via