மெட்ரோ ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

by Staff / 08-07-2023 05:01:42pm
மெட்ரோ ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை தலைநகர் டெல்லியில்  25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைலாஸ் காலனி மெட்ரோ ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுத்துவிட்டு நடைமேடைக்கு வந்த இளைஞர், அப்போது வந்துகொண்டிருந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார், உடலை தண்டவாளத்தில் இருந்து அகற்றினர். உயிரிழந்தவர் அஜய் அர்ஜுன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Tags :

Share via