ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என உச்சநீதிமன்றம் கவலை.

by Editor / 26-02-2023 10:40:53am
 ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என உச்சநீதிமன்றம் கவலை.

அனைத்து மட்டங்களிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், எந்த ஒரு அரசு அலுவலகத்து சென்றாலும் பணம் கொடுக்காமல் எந்த ஒரு விஷயமும் அங்கு நடைபெறாது. அதேபோல் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யபப்ட்ட நபர் எம்.எல்.ஏவாகவோ, அமைச்சராகவோ ஆகிவிடலாம். ஜனநாயகத்தின் பெயரில் இவை நடக்கின்றன. இதனால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த விவகாரம் குறித்து அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என கூறியுள்ளது.

 

Tags : ஊழல்

Share via