மதுரையில் ஒரே தேர்வு மையத்தில் தனது 47 வயது தாயுடன் குரூப்-4 தேர்வு எழுதிய மகள்

by Editor / 24-07-2022 05:01:52pm
மதுரையில் ஒரே தேர்வு மையத்தில் தனது 47 வயது தாயுடன் குரூப்-4 தேர்வு எழுதிய மகள்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தாயும் மகளும் ஒரே மாதிரி டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வு எழுதினர் என்ஜிஓ நகரைச் சேர்ந்த 47 வயதான வளர்மதி பிஏ தமிழ் படித்துள்ளார். இவரது மகள் சத்யபிரியா நீட் தேர்வுக்கு படித்து இரண்டு முறை தேர்வு எழுதியுள்ளார். இந்த நிலையில் குரூப்-4 தேர்வு எழுத விரும்பிய வளர்மதி தன்னுடன் சேர்ந்து தேர்வு எழுதும் மகளிடம் கேட்டுக்கொண்டார். இருவரும் தேர்வுக்கு விண்ணப்பித்து அடுத்து கள்ளிக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட நிலையில் இன்று தாயும் மகளும் ஒன்றாக  தேர்வு மையத்திற்கு வந்து தேர்வு எழுதினர்

 

Tags :

Share via