தென்காசி மாவட்டத்திற்கு வரும் ஏப்ரல் மாதம் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை

by Admin / 24-03-2023 01:24:57pm
தென்காசி மாவட்டத்திற்கு வரும் ஏப்ரல் மாதம் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை

தென்காசி மாவட்டத்திற்கு வரும் ஏப்ரல் மாதம் 5-ம் தேதி புதன்கிழமை அன்று பங்குனி உத்திரத் திருநாளை முன்னிட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த உள்ளூர் விடுமுறையானது பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேர்வு தொடர்பாக பணியாற்றும் அலுவலருக்கும்   பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .திருநெல்வேலி மாவட்டத்திற்கும்  ஏப்ரல் ஐந்தாம் தேதி பங்குனி உத்திரத்தை முன்னிட்டு  உள்ளூர் விடுமுறை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via