கள்ளக்காதல் ஜோடிக்கு உறவினர்கள் கொடுத்த தண்டனை

by Staff / 06-09-2023 12:07:38pm
கள்ளக்காதல் ஜோடிக்கு உறவினர்கள் கொடுத்த தண்டனை

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், லெபாக்ஷி மண்டல் பகுதியை சேர்ந்த பெண்ணும், அவரின் உறவினர் இளைஞருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த குடும்பத்தினர், கள்ளக்காதல் ஜோடியை கடுமையாக தாக்கினர். பின்னர், அவர்களின் தலைமுடியை அரைகுறையாக வெட்டி, கைகளை கட்டி செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் அழைத்து சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து தகவல் அறிந்த காவல் துறையினர், கள்ளக்காதல் ஜோடியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via