பல்லடம் கொலை - 2 பேர் சரண்

by Staff / 06-09-2023 11:55:06am
பல்லடம் கொலை - 2 பேர் சரண்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் வீட்டின் அருகே மது அருந்திய நபரை தட்டிக்கேட்டபோது ஒரே குடும்பத்தை சேர்ந்த செந்தில்குமார், மோகன், புஷ்பவதி, ரத்தினாம்பாளா ஆகிய 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். அதன்படி, வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான வெங்கடேஷ், சோனை முத்தையா ஆகியோர் திருப்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 

 

Tags :

Share via