குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிப்பு.

by Editor / 19-07-2023 08:47:05am
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிப்பு.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலத்தில் தென்மேற்குப்பருவமழைக்காலமென்பதால் தற்போது சீசன் காலம் ஆகும் இந்த சீசனைக் கொண்டாட வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.இந்த சூழலில், குற்றாலம் பகுதியில் உள்ள மெயின் அருவி,பழையக்குற்றாலம் ஆகிய அருவியில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து வந்த  நிலையில், குற்றாலம் பகுதியில் உள்ள மற்ற அருவிகளில் கூட்டத்திற்கு ஏற்றால் போல் வரிசையிலும், மொத்தமாகவும் சுற்றுலா பயணிகள் குளித்து வந்தனர்.இந்தநிலையில் நேற்றுஇரவு முதல் மேற்குத்தொடர்ச்சிமலைப்பகுதிகளில் மழையின் தாக்கம் காரணமாக அருவிகளுக்கு இன்று அதிகாலைமுதல் நீர்வரத்து வரத்தொடங்கியதால் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.மொத்தத்தில் 60 போலீசார் மட்டுமே அனைத்து அருவிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

Tags : குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிப்பு.

Share via