கோவில் சுற்றுச்சுவரில் இருந்து  தவறி விழுந்து சிறுவன் பலி!

by Editor / 22-07-2021 05:54:08pm
கோவில் சுற்றுச்சுவரில் இருந்து   தவறி விழுந்து சிறுவன் பலி!

 

 

தென்காசி அருகே உள்ள வள்ளியம்மாள்புரம் சர்ச் தெருவை சேர்ந்தவர் முப்பிடாதி கனி. கூலி தொழிலாளி. இவரது மகன் சூர்யா (10). இவர் அங்குள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா விடுமுறை காரணமாக வீட்டில் இருந்து வந்த சூர்யா, நேற்று தனது நண்பர்களுடன் ஊரில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவில் சுற்றுச் சுவரில் ஏறி விளையாண்டி கொண்டிருந்தான்.

அப்போது, எதிர்பாராத விதமாக கால் இடறி தவறி கீழே விழுந்தான். இதில் சிறுவன் சூர்யாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மயங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சூர்யாவை மீட்டு உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை கேட்டு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் இலத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் சுவரில் ஏறி விளையாடிய சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் வள்ளியம்மாள்புரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via