தேநீர் விருந்தில் தமிழக அரசு புறக்கணிப்பு

by Admin / 14-04-2022 06:14:18pm
தேநீர் விருந்தில் தமிழக அரசு புறக்கணிப்பு

தமிழக ஆளுநர் மாளிகையில் நடந்த தமிழ்ப்புத்தாண்டு,பாரதியார் சிலை திறப்பு,தேநீர் விருந்தில் தமிழக அரசு சார்பாக முதலமைச்சர்,அமைச்சர்கள் கலந்து கொள்ளப்போவதில்லை.நீட் விலக்கு குறித்து தமிழக அரசு கொண்டு வந்த மசோதாவை இதுவரை குடியரசு தலைவருக்கு அனுப்பாததை கண்டித்து தேநீர் விருந்தில் தமிழக அரசு  ர்பாக கலந்து கொள்ளப்போவதில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு,மா.சுப்பிரமணியன் தெரிவித்தனர்.நீட்விலக்கு     குறித்துஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் பா.ஜக மத்திய அமைச்சர் எல்.முருகன்,கரு.நாகராஜன்,வி.பி.துரைசாமி,குஷ்பூ.அ.தி.மு.கஎஸ்.பி.வேலுமணி,தங்கமணி,விஜயபாஸ்கர்,த.மா. பாஜ.க உள்ளிட்டகட்சிகள் பங்கேற்றனர்.காங்கிரஸ்,வி.சி.க,கம்யூனிஸ்ட்கள் பங்கேற்கவில்லை.

 

Tags :

Share via