சரிந்து விழுந்த கட்டிடம்.. 2 பேர் பலி

by Staff / 04-09-2023 12:27:26pm
சரிந்து விழுந்த கட்டிடம்.. 2 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் மூன்று மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை அடுத்து 12 பேர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். மேலும் தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் இருந்து இதுவரை 12 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மாவட்ட எஸ்பி தினேஷ் குமார் சிங் தகவல் தெரிவித்தார். இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via