மூன்று பேரை கடித்து குதறிய கரடி உயிரிழந்தது. சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சி.

by Editor / 08-11-2022 08:42:25am
மூன்று பேரை கடித்து குதறிய கரடி உயிரிழந்தது. சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சி.

தென்காசி அருகிலுள்ள கடையம் அருகே பெத்தான் பிள்ளை கிராமத்தில் மூன்று பேரை தாக்கிய கரடியை வனத்துறையினர் மயக்க ஊசி போட்டுப் பிடித்தனர். அந்த கரடியை களக்காடு செங்கல்தேரி வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். ஆனால் கரடி அங்கு மர்மமான முறையில் நேற்று உயிரிழந்தது.இந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்டுத்தியுள்ளது.அதிகளவில் மயக்க மருந்து செலுத்தப்பட்ட ஊசியை பயன்படுத்தினார்களா என்பது குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.
 

மூன்று பேரை கடித்து குதறிய கரடி உயிரிழந்தது. சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சி.
 

Tags :

Share via