தெலுங்கானா எக்ஸ்பிரஸில் தீ விபத்து

by Staff / 19-08-2023 12:17:16pm
தெலுங்கானா எக்ஸ்பிரஸில் தீ விபத்து

தெலங்கானா எக்ஸ்பிரஸில் இன்று பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எஸ்-2 பெட்டியில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. இதனால் பயணிகள் பயத்தில் அலறினர். தகவல் அறிந்த லோகோ பைலட், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே ரயிலை நிறுத்தினார். ரயில் நின்றவுடன் பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித காயங்கள் ஏதும் ஏற்படவில்லை அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். பெங்களூரிலும் இன்று காலை ஒரு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via