கோழி கறிக்காக பக்கத்து வீட்டை சேர்ந்த பப்லு கொடூர கொலை

by Staff / 23-10-2022 03:14:39pm
கோழி கறிக்காக பக்கத்து வீட்டை சேர்ந்த பப்லு  கொடூர கொலை

மத்தியப் பிரதேசம்: போபால் அருகிலுள்ள சவானி பதார் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பப்பு அஹிர்வார். இவர் சம்பவத்தன்று தனது மனைவியிடம் கோழிக்கறி சமைத்து தருமாறு கூறியுள்ளார். ஆனால் அதற்கு இவரது மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பப்பு அஹிர்வார் தனது மனைவியை தாக்கி அவரை அடித்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த பப்லு என்பவர் இவர்களின் சண்டையை விலக்கி விட்டுள்ளார். தனது வீட்டு சண்டையில் பக்கத்து வீட்டுக்காரர் தலையிட்டதால் கடும் கோவம் கொண்ட பப்பு அஹிர்வார் கம்பால் பப்லுவை கம்பால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பப்லுவின் சத்தம் கேட்டு அங்கு வந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் பப்பு அஹிர்வாரை கைது செய்தனர்.

 

Tags :

Share via