அமலாக்கத்துறை சோதனையில் 15 கோடி பறிமுதல்

by Staff / 16-09-2023 01:23:33pm
அமலாக்கத்துறை சோதனையில் 15 கோடி பறிமுதல்

மணல் கடத்தல், மணல் குவாரிகளில் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளின் அடிப்படையில் 4 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனை நிறைவு பெற்றதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது. சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. அமலாக்கத் துறை சோதனையில், கணக்கில் காட்டப்படாத ₨15 கோடி பணத்தை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. ஒரு கிலோ தங்கம் மற்றும் ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கனிமவளத்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

 

Tags :

Share via