நெடுஞ்சாலையில் வாலிபர் உடல்
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள சமத்துபுரம் மேடு பகுதியில் கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் கிடப்பதாக சித்தோடு காவல்துறைக்கு வந்த தகவலின் பெயரில் சித்தோடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த வாலிபர் பெருந்துறையைச் சேர்ந்த சுதாகர் என்பது தெரியவந்தது. இது குறித்து சம்பவம் குறித்து சித்தோடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இறந்தவர் ஏன் இங்கு வந்தார் எதற்காக வந்தார் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சுதாகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது சம்பவம் குறித்து சுதாகரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
Tags :