திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் மாயாண்டி. இவருடைய மகன் குமரிமுத்து (வயது 26). இவர் திருப்பூரில் தங்கி பல்லடம் ரோட்டில் உள்ள பூ மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன் னும் திருமணமாகவில்லை. இதன் காரணமாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் கடந்த சில நாட் களாக செல்போனில் கோபத்துடன் பேசியபடியே இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று திடீரென பூ மார்க்கெட் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :