மோடி உருவ பொம்மையை செருப்பால் அடித்து போராட்டம்
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய அரசின் நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்துள்ளனர். ரொறன்ரோவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக அண்மையில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங், நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கோஷம் எழுப்பினார். பின்னர் இந்திய தேசியக் கொடியை எட்டி உதைத்து அவமதித்தனர். பின்னர் அதற்கு தீ வைத்தனர். தொடர்ந்து போராட்டக்காரர்கள் அனைவரும் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை செருப்பால் அடித்து இந்தியாவுக்கு எதிராகவும், காலிஸ்தானுக்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பினர். பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் நாடாக அறிவிக்க வலியுறுத்தி காலிஸ்தானியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Tags :