பஞ்சாயத்து கிளர்க் வெட்டிக் கொலை
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா வேப்பிலங்குளத்தில் பஞ்சாயத்து கிளர்க்காக பணிபுரிந்து வந்தவர் சங்கர். இவர் இன்று (பிப்., 03) மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.
Tags :