மகள் இறந்த சோகத்தில் பெற்றோர் விஷம் அருந்தி தற்கொலை

by Staff / 18-02-2024 01:46:38pm
மகள் இறந்த சோகத்தில் பெற்றோர் விஷம் அருந்தி தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே மாவுத்தன்பட்டி பகுதியில் மகள் இறந்த சோகத்தில் பெற்றோர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஆர்த்தி (17) என்ற சிறுமி தற்கொலை செய்து கொண்டார். இதனால், துக்கத்தில் இருந்த பெற்றோர் ரமேஷ், கிருஷ்ணவேணி அடுத்தடுத்து விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளனர். இவர்களின் மற்றொரு மகளான மோகனப்பிரியா (23) பள்ளப்பட்டி சிப்காட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பெற்றோர் இறந்த சம்பவம் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Tags :

Share via