விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்

by Staff / 18-02-2024 01:44:57pm
விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்

வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய பாஜக அரசு சதியா? இந்திய தேர்தல் ஆணையமே நேர்மையான தேர்தலை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 23 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாஜக ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில், 400 இடங்களில் வெல்வோம் என்று அவர்கள் கூறுவது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் அவர்கள் முறைகேடு செய்யத் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்ற ஐயத்தை வலுப்படுத்துகிறது. 100 சதவீதம் ஒப்புகை சீட்டை எண்ணித் தேர்தல் முடிவை அறிவிப்போம் என தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via