செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு 25 ஆம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயில்

by Editor / 24-10-2022 01:03:08pm
செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு 25 ஆம் தேதி  முதல் எக்ஸ்பிரஸ் ரயில்

தென்காசி: செங்கோட்டையில் இருந்து மதுரை, தஞ்சாவூர் வழியாக மயிலாடுதுறைக்கு 25 ஆம் தேதி  முதல் எக்ஸ்பிரஸ் ரயில் இயங்க உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் இருந்து டெல்டா மாவட்டங்களை இணைக்கும் வகையில் பகல் நேர ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, மயிலாடுதுறை - திண்டுக்கல் இடையே இயங்கி வரும் 16847/16848 ரயிலையும், மதுரை - செங்கோட்டை இடையே இயங்கி வரும் 06665/06662 ரயிலையும் ஒன்றாக இணைத்து, ஒரே ரயிலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி அக்டோபர் 25ஆம் தேதி முதல் மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில் 16847 சேவை தொடங்குகிறது. மயிலாடுதுறையில் இருந்து இந்த ரயில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும். மறு மார்க்கத்தில் செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் 16848 செங்கோட்டையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு மயிலாடுதுறை சென்று சேரும்.

இந்த ரயில்கள் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர் மஞ்சத்திடல், திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்கள் 14 பெட்டிகளுடன் இயங்கும்.

 

Tags :

Share via