ஆந்திராவில் பறவைக் காய்ச்சல்.. அரசு எச்சரிக்கை

by Staff / 18-02-2024 01:59:32pm
ஆந்திராவில் பறவைக் காய்ச்சல்.. அரசு எச்சரிக்கை

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளில் கோழிகள் அதிகளவில் இறக்கின்றன. இதனால் கிருஷ்ணா மற்றும் கோதாவரி மாவட்ட அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். பறவை காய்ச்சல் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 721 ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திரா மற்றும் தமிழகத்தின் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via