தி.மு.க.,வை எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழப்பது உறுதி அமைச்சர் சுப்பிரமணியன்

by Staff / 18-02-2024 02:09:35pm
தி.மு.க.,வை எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழப்பது உறுதி அமைச்சர் சுப்பிரமணியன்

2024 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 40க்கு 40 மட்டுமல்ல, தி.மு.க.,வை எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழப்பது உறுதி என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் சாதனைகளால் பாசிசத்தை வீழ்த்துவதற்கு, இந்தியாவை வெல்வதற்கு மக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் 40க்கு 40 மட்டுமல்ல, 40 தொகுதிகளிலும் தி.மு.க.,வை எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழப்பது உறுதி. கடந்த தேர்தலில் இத்தொகுதியில் வெற்றி பெற்ற எம்.பி., கவுதமசிகாமணியின் கோரிக்கை ஏற்று, கள்ளக்குறிச்சியில் மருத்துவக்கல்லுாரி அமைக்கப்பட்டது என்றார்.

 

Tags :

Share via