தேவேந்திர குல வேளாளர் மக்களை பாஜக ஏமாற்றிவிட்டது - கிருஷ்ணசாமி

by Staff / 09-02-2024 12:43:08pm
தேவேந்திர குல வேளாளர் மக்களை பாஜக ஏமாற்றிவிட்டது - கிருஷ்ணசாமி

தேவேந்திர குல வேளாளர் மக்களை பாஜக ஏமாற்றிவிட்டது என புதிய தமிழகம் கட்சி தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், 'அரசியல் சூழலை முழுமையாக ஆய்வு செய்தே கூட்டணி இறுதியாகும். புதிய தமிழகம் கட்சிக்கு, வரும் மக்களவைத் தேர்தல் மிக முக்கியம். அதிமுக - பாஜக இணைந்து செயல்பட வேண்டும் என்று விரும்பினேன். வட துருவம், தென் துருவம் போல் அதிமுகவும் பாஜகவும் உள்ளன. அதிமுக, பாஜக மீண்டும் ஒன்றிணைய வாய்ப்பில்லை. தேவேந்திர குல வேளாளர் மக்களை பாஜக ஏமாற்றிவிட்டது' என கூறியுள்ளார். இதன் மூலம் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளதாக கிருஷ்ணசாமி சூசகமாக தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via