புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

by Staff / 02-09-2023 04:28:31pm
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

எடப்பாடி நகராட்சி பகுதியில் குட்கா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப் போது எடப்பாடி- பவானி ரோடு மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்த கோபால் (வயது 60), எடப்பாடியை அடுத்த செட்டி மாங்குறிச்சி, அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த மாரிமுத்து (80) ஆகிய இருவரும் புகையிலை பொருட்கள் விற்றது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்

 

Tags :

Share via