17 வயது மகளை கவுரவக் கொலை செய்த தந்தை

by Staff / 23-10-2023 04:49:21pm
17 வயது மகளை கவுரவக் கொலை செய்த தந்தை

கர்நாடகாவில் நடந்த மற்றொரு கவுரவக் கொலை சற்று முன் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தலித் இளைஞருடன் காதலித்து ஓடியதற்காக தந்தை ஒருவர் தனது மகளை கொடூரமாக கொலை செய்துள்ளார். நாகநாதபுரத்தில் உள்ள டாக்டர் லேஅவுட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மைசூர் எச்.டி.கோட்டை சேர்ந்த காளிஹுண்டி கணேசனுக்கு (வயது 50) பல்லவி (வயது 17) என்ற மகள் உள்ளார். பல்லவி ஒரு தலித் இளைஞனை காதலித்து வந்துள்ளார். அவர் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். அவமானம் அடைந்த இளம்பெண்ணின் தந்தை திட்டமிட்டபடி அவளைக் கொன்றார்.

 

Tags :

Share via