ஸ்பெயின் சுற்றுலா பயணிகளுக்கு 10 லட்சம் இழப்பீடு

by Staff / 05-03-2024 04:24:33pm
ஸ்பெயின் சுற்றுலா பயணிகளுக்கு 10 லட்சம் இழப்பீடு

ஜார்கண்ட் மாநிலம் தும்காவில் கடந்த மார்ச் 1-ம் தேதி ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணி மர்ம கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு ஜார்கண்ட் போலீசார் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கினர். பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், காவல்துறையின் உடனடி நடவடிக்கை குறித்து திருப்தியடைந்தார். இந்த வழக்கில் இதுவரை 7 பேருக்கு தொடர்பு இருப்பதாக கூறிய போலீசார் இதுவரை 3 பேரை கைது செய்துள்ளனர். மற்றவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via