டி.கே. சிவகுமார் மீதான வழக்கு தள்ளுபடி

by Staff / 05-03-2024 04:19:00pm
டி.கே. சிவகுமார் மீதான வழக்கு தள்ளுபடி

கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மீதான பணமோசடி வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்க இயக்குனரகம் (ED) தனக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி டி.கே உச்ச நீதிமன்றத்தை அணுகினார். நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய உச்ச பெஞ்ச் அவருக்கு நிவாரணம் வழங்கியது. 2018ல் அவர் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via