மழை நீரில் சிக்கி ஏரிக்குள் விழுந்த அண்ணன், தங்கை பலி

by Staff / 22-10-2024 03:59:11pm
மழை நீரில் சிக்கி ஏரிக்குள் விழுந்த அண்ணன், தங்கை பலி

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கெங்கேரி பகுதியில் நடந்துச்சென்ற அண்ணன் - தங்கையான சீனிவாஸ் (13) மற்றும் லட்சுமி (11) மழை நீரில் சிக்கி ஏரிக்குள் விழுந்துள்ளனர். இருவரையும் காப்பாற்ற அவர்களது தாய் தாயம்மா முயன்றுள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர் சீனிவாஸ் உடலை மீட்ட நிலையில், லட்சுமி உடலைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via