சிங்கு எல்லைக்கு வந்த விவசாயிகள்

by Staff / 13-02-2024 11:48:07am
சிங்கு எல்லைக்கு வந்த விவசாயிகள்

கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, விவசாய சங்கங்கள் இன்று 'சலோ டில்லி' நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்து, பார்லிமென்ட் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், விவசாயிகள் அதிக அளவில் சிங்கு எல்லைக்கு வந்துள்ளனர். டெல்லியில் நடைபெறும் இந்த போராட்டத்தில் 200 விவசாய சங்கங்கள் கலந்து கொள்கின்றன. இதனிடையே, உ.பி., பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களின் எல்லையோரத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் முற்றிலுமாக மூடியுள்ளனர்.

 

Tags :

Share via