வேனில் மின்சாரம் தாக்கி பயங்கர விபத்து- 10 பேர் பலி

by Editor / 01-08-2022 09:44:29am
 வேனில் மின்சாரம் தாக்கி பயங்கர விபத்து- 10 பேர் பலி

மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் அருகே பிக்கப் வேனில் சுமார் 27 பேர் நேற்று இரவு பயணித்துள்ளனர். அப்போது மின்சாரம் தாக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த வேனில் இருந்த 27 பேரில் 16 பேர் படுகாயம் அடைந்தனர். பயணிகள் அனைவரும் சிட்டல்குச்சி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் வேனில் இருந்த ஜெனரேட்டரின் (டிஜே சிஸ்டம்) வயரிங்கில் இருந்து மின் கசிந்ததால் இந்த விபத்து நடைபெற்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் 16  மேற்பட்டவர்கள் ஜல்பைகுரி மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

Tags : Electric shock in pickup van - 10 people killed!

Share via