பாலியல் வன்புணர்ச்சி செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
மதுரை பைகாரா பகுதியைச் சேர்ந்த அன்பு என்ற வாலிபர் கடந்த 2015 ஆம் ஆண்டு அவரது பகுதியில் வசித்து வந்த சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக சிறுமியின் தாயார் சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றப்பத்திரிக்கையை மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ராதிகா இளைஞர் அன்பு செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.
Tags : Life imprisonment for teenager who raped