பள்ளத்தாக்கில் கவிழ்ந்த டெம்போ.. 10 பேர் பலி

by Staff / 15-06-2024 03:38:47pm
பள்ளத்தாக்கில் கவிழ்ந்த டெம்போ.. 10 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியில் உள்ள பத்ரிநாத் நெடுஞ்சாலை அருகே இன்று (ஜூன் 15) அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. 23 பயணிகளுடன் சென்ற டெம்போ டிராவலர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் SDRF மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மீட்பு பணிகள் தொடங்கிய நிலையில் இதுவரை 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via