நெல்லை மெஸ் உணவகத்தில் பரிமாறப்பட்ட சாம்பாரில் கரப்பான் பூச்சி

by Editor / 24-07-2022 04:57:12pm
நெல்லை மெஸ் உணவகத்தில் பரிமாறப்பட்ட சாம்பாரில் கரப்பான் பூச்சி

 ராமேஸ்வரத்தில் உள்ள நெல்லை மிஸ் என்ற உணவகத்தில் பரிமாறப்பட்ட சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்ததாக புகார் எழுந்ததை அடுத்து அந்த உணவகத்திற்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூவாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். கும்பகோணத்தைச் சேர்ந்த சிலர் அந்த உணவகத்தில் சாப்பிட சென்ற போது தோசை பரிமாறப்பட்ட சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்ததாக உணவுப் பாதுகாப்புத் துறையிடம் புகார் அளித்தனர். நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் 7 நாட்களுக்குள் சமையலறையும் முறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர் மீறினால்  உணவு அறைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்து நோட்டீஸ் வழங்கினர்.

 

Tags :

Share via