கடலில் மூழ்கி சகோதரர்கள் பலி

by Editor / 16-07-2021 07:48:02pm
 கடலில் மூழ்கி சகோதரர்கள் பலி

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கீழதுரை குடியிருப்பைச் சேர்ந்த அருள் என்பவர் தனது குடும்பத்துடன் உவரி அந்தோனியார் ஆலயத்திற்கு  வழிபட வந்துள்ளார்  வழிபாட்டு முடித்துவிட்டு அவரது மகன்கள் ஆக்னல் மற்றும் அவரது தம்பி  பிரவீன் ஆகிய இருவரும் வேளாங்கண்ணி மாதா குருசடி அருகே கடலில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கடல் அலை அதிக வேகத்துடன் அடித்ததால்  கடல் அலையில் சிக்கினார். இதனையடுத்து மீனவர்கள் அவர்களை மீட்டு திசையன்விளை தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்

 இதுபற்றி கூடன்குளம் கடலோர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த ஆக்னல் மற்றும் பிரவீன் ஆகிய இருவரும் அண்ணன் தம்பி என்பதுடன் அவர்கள் இருவரும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 

 

Tags :

Share via