கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்க மதுரை ரயில்வே கோட்டம் ஏற்பாடு செய்துள்ளது.
திருச்செந்தூரில் இருந்து அக்டோபர் 30 ஞாயிற்றுக்கிழமை புறப்படும் திருச்செந்தூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06910) அட்டவணை;
திருச்செந்தூர் இரவு 9:00, ஆறுமுகநேரி 9:17 , நாசரேத் 9:31, ஸ்ரீ வைகுண்டம் 9:44 , செய்துங்கநல்லூர் 9:58 திருநெல்வேலி இரவு 10.30,
மறு மார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து அக்டோபர் 30 ஞாயிற்றுக்கிழமை புறப்படும் திருநெல்வேலி - திருச்செந்தூர் சிறப்பு ரயில் (06909) அட்டவணை:
திருநெல்வேலி இரவு 11:05 , செய்துங்கநல்லூர் 11:26 , ஸ்ரீ வைகுண்டம் 11: 37 , நாசரேத் 11: 51, ஆறுமுகநேரி 12:07 மறுநாள் நடுஇரவு , திருச்செந்தூர் நடுஇரவு 12:30 சென்று சேரும்.
இந்த ரயில்கள் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீ வைகுண்டம், செய்துங்கநல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.இந்த ரயில்களில் 8 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டியுடன் கூடிய சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும்.
Tags :