அமைச்சர்  கே என் நேருவைசந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்த தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன்.

by Editor / 02-11-2022 04:52:59pm
 அமைச்சர்  கே என் நேருவைசந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்த தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன்.

தமிழக நகர்புற வளர்ச்சி துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரியத் துறை அமைச்சர்  கே என் நேருவைசந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்த தென்காசி தெற்குமாவட்ட செயலாளர் சிவபத்மநாபன்.

தென்காசி தெற்கு மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாம்பவர் வடகரை மற்றும் வடகரை கீழ்பீடாகை,(செ)புதூர் ஆகிய பேரூராட்சிகளுக்கும் 
 
  ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழப்பாவூர் பேரூராட்சிக்கும் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு நிதி வேண்டியும் இன்னும் மாவட்டத்திற்க்கு  தேவையான குடிநீர் வசதி வேண்டியும்,
 ஆலங்குளம் ஆர்.நவநீதகிருஸ்ணபுரத்திற்க்கு  தட்டுப்பாடின்றி தாமிரபரணி தண்ணீர் வேண்டியும்,

சொக்கம்பட்டி கவுன்சிலர்  மணிகண்டன  அவர்களின் கோரிக்கையின்படி சொக்கம்பட்டிக்கு  தினம் 2.96  இலட்சம் லிட்டர் தாமிரபரணி தண்ணீர் வழங்க வேண்டி கோரிக்கை மனுவினையும்,

நகர்புற வளர்ச்சி துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரியத் துறை அமைச்சர்  கே என் நேருவிடம்  தெற்குமாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் வழங்கினார்.அவருடன்  உடன் கீழப்பாவூர் பேரூர் திமுக செயலாளர் ஜெகதீசன் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜன், அரசு ஒப்பந்தக்கார்ர் சண்முகவேல், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற துணைச் செயலாளர் அருணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via