சைக்கிள் ஓட்ட கற்றுத் தருவதாக சொல்லி சிறுமி கட்டிட தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

by Editor / 18-03-2022 02:07:35pm
சைக்கிள் ஓட்ட கற்றுத் தருவதாக சொல்லி சிறுமி  கட்டிட தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

.ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ராசு.   இவர் தனது வீட்டின் அருகே வசித்து வரும் 11 வயது சிறுமிக்கு சைக்கிள் ஓட்ட கற்று தருவதாக சொல்லி இருக்கிறார் .   அந்த சிறுமிக்கு ஆர்வத்துடன் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள வந்திருக்கிறார்.   சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்துக் கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று இருக்கிறார் ராசி.  அப்போது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருக்கிறார்.வீட்டிற்கு வந்ததும் ராசு தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை பெற்றோரிடம் சொல்ல, ஆத்திரப்பட்ட பெற்றோர்கள் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்திருக்கிறார்கள்.  அந்த புகாரின் பேரில் கட்டிட தொழிலாளி ராசு, போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.இது தொடர்பான வழக்கு ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.   வழக்கின் விசாரணைகள் முடிவடைந்து ராசு மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது.   இதையடுத்து அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

Tags : 7-year-old girl jailed for 7 years for teaching cycling

Share via