கார் கண்ணாடியை உடைத்து ரூ.5 லட்சம் திருட்டு

by Staff / 14-09-2023 03:55:18pm
கார் கண்ணாடியை உடைத்து ரூ.5 லட்சம் திருட்டு

தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் தாமராச்சார் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் வியாபாரி அஜ்மிரா மாலு என்பவர் மிரியாலகுடா பதிவு அலுவலகத்துக்கு வந்து வேலையை முடித்துவிட்டு, ஐந்து லட்சம் பணத்தை காரில் போட்டுவிட்டு, நண்பர்களுடன் மதிய உணவு சாப்பிட ஒரு உணவகம் முன்பு காரை நிறுத்தியுள்ளார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில், அவர்களை பின்தொடர்ந்து பைக்கில் வந்த இருவர், கார் கண்ணாடிகளை உடைத்து, 5 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்த தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via