இந்திய தேசியக் கொடிக்கு அவமதிப்பு
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை இந்திய முகவர்கள் கொன்றதாக கனடா பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் இந்தியா, கனடா உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் கனடாவின் டொராண்டோவில் இந்தியக் கொடியை எட்டி உதைத்து அவமதித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து இந்தியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Tags :